பகுதி - 938

யமன் வரும்போது அடியேனைக்..
பகுதி - 938
Published on
Updated on
1 min read

‘யமன் வரும்போது அடியேனைக் காத்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்று எழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனத் தானனத் தனதனத் தானனத்

      தனதனத் தானனத்                  தனதான

கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்

         கணவகெட் டேனெனப்           பெறுமாது

      கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்

         கதறிடப் பாடையிற்              றலைமீதே

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்

         பறைகள்கொட் டாவரச்           சமனாரும்

      பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்

         பரிகரித் தாவியைத்              தரவேணும்

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்

         றருணையிற் கோபுரத்            துறைவோனே

      அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்

         தரியசொற் பாவலர்க்             கெளியோனே

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்

         புனமறப் பாவையைப்            புணர்வோனே

      பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்

         பொருமுழுச் சேவகப்             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com