தம்மையும் தமது சேவைகளையும் புகழ வேண்டாம் என்று காஞ்சி காமகோடி பீட ஸ்ரீ ஆச்சார்யாள், பொது மக்களையும் பத்திரிகைகளையும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
பொது மக்களும், பத்திரிகைகளும் உற்சாகத்தில் அதிகப்படியாகத் தம்மைப் புகழ்வதால் இடைஞ்சல்களும் மனக் கஷ்டங்களும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.
என் மீதுள்ள பக்தியினால் என்னை புகழ்ந்தாலும், அதிகப்படியாகப் புகழ்வது எனக்கு சங்கடத்தையும் சிரமத்தையும் தருகிறது. சில சமயங்களில் ஹிந்து தர்மத்துக்கு பெரும் சேவை புரிகிற மற்றவர்களை குறைத்து என்னை புகழ்வது எனக்கு வேதனையும் வருத்தமும் தருகிறது.
இப்படியெல்லாம் செய்தால், ஹிந்து தர்மத்துக்காக பணியாற்றுவது பாதிக்கப்படும். எத்தனையோ பெரியவர்கள், மகான்கள் ஹிந்து தர்மத்தைப் பரப்ப அரும் பெரும் பணியாற்றி வருகிறார்கள்.
நமது தர்மத்தைப் பரப்ப இன்னும் எவ்வளவோ பெரு முயற்சிகள் செய்யவேண்டி இருக்கையில், பத்திரிகைகளும் பொது மக்களும் ஆக்க முறையில் நடந்துகொள்வது அவசியம். ஆகவே, என்னைப் புகழாமல் இருப்பதே எனக்குச் செய்யும் பெரும் உதவியாகும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


