சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(18.07.1990)காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநரின் ஆறு மாத கால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்பட்டுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2015, 12:37 pm

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநரின் ஆறு மாத கால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்பட்டுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று மாநில ஆளுநர் சக்ஸேனா பரிந்துரை செய்திருந்தார்.

அவரது பரிந்துரையை ஏற்று, இந்திய அரசியல் சட்டத்தின் 356-வது விதியின்கீழ் இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்தார்.

குடியரசுத் தலைவரின் பிரகடனத்தின்படி ஜம்மு - காஷ்மீர் மாநில அரசின் அனைத்து அதிகாரங்களும், கடமைகளும் மாநில ஆளுநரிடம் விடப்பட்டுள்ளது. மாநில சட்டப் பேரவையின் அதிகாரங்களை நாடாளுமன்றம் செயல்படுத்தும்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கென அரசியல் சட்டத்தில் சிறப்பு விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி அந்த மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் ஆளுநர் ஆட்சியை நீடிக்க முடியாது.

ஜம்மு - காஷ்மீரில் ஜூலை 19-ம் தேதி ஆளுநர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த மாநில ஆளுநராக ஜக் மோகன் நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து அன்றைய முதலமைச்சர் பாரூக் அப்துல்லா பதவி விலகியதை தொடர்ந்து ஆளுநர் ஆட்சியின் கீழ் அந்த மாநிலம் கொண்டு வரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.