ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது ஆத்மா சாந்தி அடைவதற்காக சர்வத மத பிரார்த்தனை நடைபெற்றது.
முன்னதாக, ராஜீவ் காந்திக்கு 13-வது நாள் ஈமக்கிரியைகள் நடைபெற்றன. படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நடுகல் ஒன்று நடப்பட்டு அதற்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சர்வமத பிரார்த்தனையில், திவ்யப்பிரபந்த பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தி கீதங்களை இசைத்தனர்.
நடுகல்லுக்கு முன்பாக சௌந்திரா கைலாசம் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து பிரார்த்தனையைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வேத கோஷங்கள் முழங்க சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது.
சர்வமத பிரார்த்தனையைத் தொடர்ந்து 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


