தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (2.6.1991)ராஜீவ் கொலையுண்ட இடத்தில் சர்வமத பிரார்த்தனை

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது ஆத்மா சாந்தி அடைவதற்காக சர்வத மத பிரார்த்தனை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2015, 11:20 am

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது ஆத்மா சாந்தி அடைவதற்காக சர்வத மத பிரார்த்தனை நடைபெற்றது.

முன்னதாக, ராஜீவ் காந்திக்கு 13-வது நாள் ஈமக்கிரியைகள் நடைபெற்றன. படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நடுகல் ஒன்று நடப்பட்டு அதற்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சர்வமத பிரார்த்தனையில், திவ்யப்பிரபந்த பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தி கீதங்களை இசைத்தனர்.

நடுகல்லுக்கு முன்பாக சௌந்திரா கைலாசம் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து பிரார்த்தனையைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வேத கோஷங்கள் முழங்க சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது.

சர்வமத பிரார்த்தனையைத் தொடர்ந்து 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.