சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று (05.03.1956)தெலுங்கானா - ஆந்திரா இணைப்பு: நேரு அறிவிப்பு

தெலுங்கானாவையும் ஆந்திராவையும் இணைத்து ஒரே ராஜ்யமாக அமைப்பதென இந்திய சர்க்கார் கொள்கை அளவில் முடிவு செய்திருப்பதாக பிரதம மந்திரி நேரு இன்று மாபெரும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். தெலுங்கான மக்களின் அச்சத்தைப் போக்க தக்க பாதுகாப்புகள் இருக்கும் என்றார் அவர்.

Updated On :5 மார்ச் 2015, 4:44 am

இந்த நாளில் அன்று

(05.03.1956)

தெலுங்கானா - ஆந்திரா இணைப்பு: நேரு அறிவிப்பு

தெலுங்கானாவையும் ஆந்திராவையும் இணைத்து ஒரே ராஜ்யமாக அமைப்பதென இந்திய சர்க்கார் கொள்கை அளவில் முடிவு செய்திருப்பதாக பிரதம மந்திரி நேரு இன்று மாபெரும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். தெலுங்கான மக்களின் அச்சத்தைப் போக்க தக்க பாதுகாப்புகள் இருக்கும் என்றார் அவர்.

இரு பிராந்திய கவுன்சில்கள் அமைக்கப்படும் என்றும், அந்தந்த பிராந்திய மக்களின் நல உரிமைகளைக் காப்பாற்ற பாதுகாப்புகள் இருக்குமென்றும் கூறினார். தெலுங்கானா மக்கள் இதை சுமுகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நேருஜி கேட்டுக்கொண்டார். பிராந்திய சபைகள் அந்தந்த பிராந்தியத்தின் கல்வி, அபிவிருத்தி நலன்களைக் கவனித்து வருமென்றும், மக்களுக்கு சர்க்கார் உத்தியோகங்கள் கிடைக்கும்படிச் செய்வதில் அவை தக்க பாதுகாப்புகளை ஏற்படுத்துமென்றும் நேருஜி கூறினார்.

இரு ராஜ்யங்களாகவே இருப்பதா அல்லது ஒரே ராஜ்யமாக அமைப்பதா என்பதைப் பற்றி நீண்ட ஆலோசனைக்குப் பின்தான் இணைப்பதென்ற முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் செய்த பிறகு விசால ஆந்திர ராஜ்யத்தை ஆதரித்தோரும் சரி, தெலுங்கானா ராஜ்யத்தை ஆதரித்தோரும் சரி, தீர்மானத்தை செயலாற்றப் புக சம்மதித்தனர். இப்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார் நேருஜி.

---

ஆந்திரா - தெலுங்கானா ராஜ்யங்களை இணைக்க இந்திய சர்க்கார் முடிவு செய்திருப்பதாக பிரதம மந்திரி நேரு அறிவித்த செய்தியைக் கேட்டதும், ஆந்திர முதல் மந்திரி ஸ்ரீ பி.கோபால ரெட்டியும், உதவி முதல் மந்தி ஸ்ரீ என்.சஞ்சீவ ரெட்டியும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தெலுங்கானாவின் நலவுரிமைகள் முழு அளவுக்குப் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதிகளை மீண்டும் இருவரும் ஊர்ஜிதம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.