சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(10.03.1962)எல்லைத் தகராறு: இந்தியாவுக்கு சீன சர்க்காரின் புதிய கடிதம்

இந்த வருடம் ஜூன் மாதம் காலாவதியாகும் திபேத் பற்றிய சீனா - இந்தியா உடன்படிக்கையைப் புதுப்பிக்கும் விஷயமாக சீன சர்க்காரிடமிருந்து இந்திய அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாகத் தெரிகிறது.

Updated On :10 மார்ச் 2015, 4:53 am

இந்த நாளில் அன்று

(10.03.1962)

எல்லைத் தகராறு: இந்தியாவுக்கு சீன சர்க்காரின் புதிய கடிதம்

இந்த வருடம் ஜூன் மாதம் காலாவதியாகும் திபேத் பற்றிய சீனா - இந்தியா உடன்படிக்கையைப் புதுப்பிக்கும் விஷயமாக சீன சர்க்காரிடமிருந்து இந்திய அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவில் பொதுத்தேர்தல் முடிவடைந்துவிட்டதால், எல்லைத் தகராறை தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென சீனாவின் இந்தப் புதிய கடிதம் நம்பிக்கை தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது.

சட்டவிரோதமாக சீனா கைப்பற்றியுள்ள இந்தியாவின் பெரும்பகுதியை அது காலி செய்தாலன்றி ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது பற்றிப் பேச இந்தியா தயாராக இருக்காது என்று இந்தியா எழுதிய குறிப்புக்கு பதிலளிக்கும் வகையில் சீனாவின் இக்கடிதம் சில நாட்களுக்கு முன்பு வந்தது.

சீனக் குறிப்பின் விவரங்கள் தெரியவில்லை. ஆனால், உயர் கட்டத்தில் அது பரிசீலிக்கப்படுவதாகவும், விரைவில் தொடங்கவுள்ள பார்லிமென்ட் கூட்டத்தில் அது பற்றி விரைவில் தகவல் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.