அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

இந்த நாளில் அன்று - (04.09.1978) - மக்கள் நலன் காக்க பத்திரிகைச் சுதந்தரம் பயன்பட வேண்டும் - ராஷ்டிரபதி சஞ்சீவ ரெட்டி

பயன்படுத்துவோரைப் பொறுத்துத்தான் பத்திரிகை சுதந்தரம் என்பதற்குப் பொருள் காண முடியும் என்று ராஷ்டிரபதி சஞ்சீவ ரெட்டி கூறினார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2015, 5:02 pm IST

பயன்படுத்துவோரைப் பொறுத்துத்தான் பத்திரிகை சுதந்தரம் என்பதற்குப் பொருள் காண முடியும் என்று ராஷ்டிரபதி சஞ்சீவ ரெட்டி கூறினார்.

ஹிந்து பத்திரிகையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை அவர் துவக்கி வைத்து அவர் பேசியதாவது -

மற்ற துறைகளின் சுதந்தரம் போலவே பத்திரிகைத் துறையின் சுதந்தரம் அமைகின்றது என்றாலும், அதனைப் பயன்படுத்துவோரைப் பொறுத்துத்தான் அதற்குப் பொருள் காண முடியும்.

வல்லமை படைத்த பத்திரிகைத் துறைக்கு நன்மை செய்யவோ, தீமை புரியவோ சக்தி இருக்கிறது. எனினும், பொது வாழ்க்கையில் வெறுக்கத்தக்க நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தி வெளியிடுவதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், அதேசமயத்தில் பத்திரிகை களில் பயன் அற்றுப்போகும் விதத்தில் அதிகாரவர்க்கத்தின் கட்டுக்கு அடங்கி நடப்பதும் கூடாது.

சுதந்தரமான பத்திரிகைகளின் சேவை ஜனநாயகத்துக்குத் தேவை. கடும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பத்திரிகைகளில் வெளியிடும்போது, ஒருதலைப்பட்சமாக இல்லாதிருப்பது கடினமான காரியம் என்றபோதிலும், தேசிய மாறுதல்களில் முக்கியப் பங்கு வகிக்கும் பத்திரிகைகள், சம்பவங்களோடு தங்களைப் பிணைத்துக்கொள்ளாமல் பார்வையாளர் என்ற முறையிலும் இருக்கவேண்டி இருக்கிறது.

இந்த இரண்டு அம்சங்களும் பத்திரிகைகளுக்குப் பெருஞ்சோதனையாகும். யாரைப் பற்றி செய்தி வருகிறதோ அவருக்கும் பத்திரிகையாளருக்கும் மோதல் ஏற்படுவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாகும்.

மாறிவரும் சமுதாயத்தில் அதிகரித்துவரும் கெடுபிடி நிலையில், பலமிக்க நேர்மையான வழிகாட்டிகள் இல்லாது போனால், பத்திரிகைகளின் பொறுப்பு அதிகரித்து பொது மக்கள் கருத்தையும் உருவாக்கவேண்டி இருக்கிறது.

கிராமப்புற மக்களின் பிரச்னைகள் பற்றியும் அவர்களது தேவை குறித்தும் பத்திரிகைகள் ஆராய்ந்து வன்மையான எழுத்துகள் மூலம் அவற்றை வெளியிட வேண்டும். பிரிவினை மனப்பான்மை, வறுமை ஆகியவற்றுக்கு எதிராகப் போர் தொடுத்துப் பத்திரிகைகள் முன்னோடியாகச் செயல்பட வேண்டும்.

பத்திரிகை என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, பொதுச் சேவையும் ஆகும். இக்காலத்தில் ஒரு பத்திரிகை நிறுவனத்தின் உண்மையான வெற்றிக்கு அதன் மிகுதியான பத்திரிகை விநியோகமோ, பெரிய வியாபாரமோ காரணம் இல்ல. பொது மக்கள் நலனைக் காப்பதிலும், அதற்காக சுதந்தரத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒரு பத்திரிகை எந்த அளவுக்கு முன் வருகிறதோ அதைப் பொறுத்துத்தான் அதன் வெற்றியும் அமையும்.

பத்திரிகைச் சுதந்தரம் என்பது பத்திரிகையாளர் நலனுக்காக மட்டுமே அல்ல. தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் அது பயன்பட வேண்டும். தேசத்தில் எல்லாமே சுமுகமாகவும், சிக்கல் ஏதுவுமின்றியும் நடைபெற்று வரும்போது மட்டும் பத்திரிகைச் சுதந்தரத்தின்பால் நம்பிக்கை வைப்பது என்பது சரியல்ல. நெருக்கடி நேரத்திலும் பத்திரிகைச் சுதந்தரத்தில் நம்பிக்கை வைத்துச் செயல்படுவதும் முக்கியமானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.