திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று - (05.09.1979) - தேர்தல் வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டத்தை தடுக்க கையெழுத்து, ரேகை - மீண்டும் அமல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு

தேர்தல் வாக்குப்பதிவின்போது, வாக்குச் சீட்டின் அடிக்கட்டையில் (கவுன்ட்டர்ஃபாயில்) வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் வர இருக்கும் லோகசபைத் தேர்தலில் அமலாக்கப்பட உள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2015, 11:33 am

தேர்தல் வாக்குப்பதிவின்போது, வாக்குச் சீட்டின் அடிக்கட்டையில் (கவுன்ட்டர்ஃபாயில்) வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் வர இருக்கும் லோகசபைத் தேர்தலில் அமலாக்கப்பட உள்ளது.

ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கு இது மிகவும் சிறந்த ஒரு முறை என்று பிரதம தேர்தல் கமிஷனர் எஸ்.எல்.ஷக்தர் தெரிவித்தார்.

1975-ல் குஜராத் சட்டசபை தேர்தலின்போது அரசியல் கட்சிகளிடம் கலக்காமலேயே கையெழுத்து, ரேகைப் பதிவு முறை கைவிடப்பட்டது.

வாக்குச் சாவடிகளில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்கவும் வாக்குப் பதிவு திறம்பட நடக்கவும் இந்த தேர்தலின்போது வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

ஆள் மாறாட்டம் செய்து வாக்களிப்பதைத் தடுக்க அடையாள அட்டைகள் வழங்கும் முறையும் ஒரு வரம்புக்கு உட்பட்டு ஏற்படுத்தப்படும். அக்டோபரில் சிக்கிமில் நடைபெறும் சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றார் ஷக்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.