தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

இந்த நாளில் அன்று - (05.09.1979) - தேர்தல் வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டத்தை தடுக்க கையெழுத்து, ரேகை - மீண்டும் அமல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு

தேர்தல் வாக்குப்பதிவின்போது, வாக்குச் சீட்டின் அடிக்கட்டையில் (கவுன்ட்டர்ஃபாயில்) வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் வர இருக்கும் லோகசபைத் தேர்தலில் அமலாக்கப்பட உள்ளது.

Published On :6 ஆகஸ்ட் 2025, 5:37 pm IST

தேர்தல் வாக்குப்பதிவின்போது, வாக்குச் சீட்டின் அடிக்கட்டையில் (கவுன்ட்டர்ஃபாயில்) வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் வர இருக்கும் லோகசபைத் தேர்தலில் அமலாக்கப்பட உள்ளது.

ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கு இது மிகவும் சிறந்த ஒரு முறை என்று பிரதம தேர்தல் கமிஷனர் எஸ்.எல்.ஷக்தர் தெரிவித்தார்.

1975-ல் குஜராத் சட்டசபை தேர்தலின்போது அரசியல் கட்சிகளிடம் கலக்காமலேயே கையெழுத்து, ரேகைப் பதிவு முறை கைவிடப்பட்டது.

வாக்குச் சாவடிகளில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்கவும் வாக்குப் பதிவு திறம்பட நடக்கவும் இந்த தேர்தலின்போது வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

ஆள் மாறாட்டம் செய்து வாக்களிப்பதைத் தடுக்க அடையாள அட்டைகள் வழங்கும் முறையும் ஒரு வரம்புக்கு உட்பட்டு ஏற்படுத்தப்படும். அக்டோபரில் சிக்கிமில் நடைபெறும் சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றார் ஷக்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.