தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

இந்த நாளில் அன்று - (09.09.1983) - ரூ.1000 மாத வருமானம் உள்ளோருக்கு ரேஷன் அரிசி இப்போதில்லை - முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் தகவல்

ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப கார்டுகளுக்கு இப்போதுள்ள நிலையில் அரிசி வழங்குவது இயலாது என்று முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Published On :6 ஆகஸ்ட் 2025, 5:37 pm IST

ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப கார்டுகளுக்கு இப்போதுள்ள நிலையில் அரிசி வழங்குவது இயலாது என்று முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

உணவு நிலைமை மாநிலத்தில் முன்பு இருந்ததைவிட இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்றபோதிலும் ஏழை, எளிய மக்கள் சமுதாயத்தின் மிகுந்த நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு மலிவு விலையில் அரிசி கொடுக்கவேண்டி உள்ளது.

ஏற்கெனவே இருபது கிலோ என்று நிர்ணயிக்கப்பட்டது, உணவுத் தட்டுப்பாடு நிலை காரணமாக குறைந்த வருமானதாரர்களுக்கு ஓரளவுக்குக் குறைக்கப்பட்டு பரவலாக விநியோகிக்கப்படுகிறது.

தற்போது அரிசி விலை சற்று இறங்கியுள்ளது. உணவு நிலையில் மிக கஷ்டமான காலத்தை ஓரளவுக்கு சமாளித்துவிட்டோம். ஒத்துழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி.

முன்பு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்ற கம்பு இப்போது ஒரு ரூபாய் அறுபது காசுக்கு கிடைக்கிறது. ஓரளவுக்கு உணவு தானிய விலை குறைந்துவருகிறது.

ஆந்திரா போன்ற உபரி மாநிலங்களில் இருந்து 30 ஆயிரம் டன் அரிசி வாங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையெல்லாம் வைத்துக்கொண்டு உணவு நிலைமையை சமாளித்து வருகிறோம்.

விளைச்சல் பெருகி, பழையபடி குடும்ப அட்டைக்கு இருபது கிலோ அரிசி வழங்கும் நிலைமை முன்னேறும் வரையில், மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டை மூலம் அரிசி கொடுப்பது என்பது இப்போதைக்கு இயலாது என்றார் எம்.ஜி.ராமச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.