அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

இந்த நாளில் அன்று - (11.09.1985) - தமிழ்நாடு அரசு ஊழியருக்கு கூடுதல் கிராக்கிப்படி - அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14 கோடி கூடுதல் செலவு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கிராக்கிப்படி அளிக்கப்படும். இம் மாதம் முதல் தேதியில் இருந்து இந்தக்  கூடுதல் கிராக்கிப்படி தரப்படும்.

News image
Updated On :10 செப்டம்பர் 2015, 4:19 pm IST

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கிராக்கிப்படி அளிக்கப்படும். இம் மாதம் முதல் தேதியில் இருந்து இந்தக்  கூடுதல் கிராக்கிப்படி தரப்படும்.

இதற்கான உத்தரவை, தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதன்மூலம் சுமார் பத்து லட்சம் ஊழியர்கள் பயனடைவர்.

குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு எட்டு ரூபாயும், அதிகபட்சமாக முப்பது ரூபாயும் கிடைக்கும். அதாவது, குறைந்தபட்சமாக இதுவரை மாதம் 48 ரூபாய் அகவிலைப்படி வாங்கும் அரசு அலுவலர்கள் இனி 56 ரூபாய் பெறுவார்கள். அதிகபட்சமாக 180 ரூபாய் பெற்றுவந்த அரசு அலுவலர்கள் இனி 210 ரூபாய் அகவிலைப்படி பெறுவார்கள்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

நான்காவது ஊதியக் குழு ஏற்கெனவே அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்தோடு இணைத்ததுபோக, ஆறு தவணை வரையில் அகவிலைப்படிகள் வழங்கப்பட்டுவிட்டன. இப்போது வழங்கப்படுவது ஏழாவது தவணையாகும்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர், அரசு மானிய உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு இந்தக் கூடுதல் அகவிலைப்படி கிடைக்கும்.

இதன்மூலம் அரசுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் செலவாகும். நடப்பு ஆண்டில் இதற்காக மட்டும் எட்டு கோடியே 17 லட்ச ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.