தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் படிக்கும் பி.இ. மாணவர்கள் ஆண்டுதோறும் 4 மற்றும் 6-வது பருவமுறை தேர்வுகள் முடிந்த பின் விடுமுறையில், இந்தப் பயிற்சி பெற பி.எஸ்.என்.எல்., ரயில் நெட், பெல், மின் வாரியம், எல்காட் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு படையெடுக்கின்றனர். மேலும் பல மாணவர்கள் தனியார் தொழில் நிறுவனங்களை நாடிச் செல்கின்றனர். இந்த நிறுவனங்களில் ஒரு வாரம் (7 வேலை நாள்கள்) மட்டுமே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் இதற்காக தனியாக கட்டணம் வசூலிப்பது இல்லை.