TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 26

திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளது.
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 26
Published on
Updated on
5 min read

தமிழ் வளர்ச்சி

- பாவேந்தர் பாரதிதாசன்

* பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்

*  பிறப்பு: 1891 ஏப்ரல் 29 புதுவையில் பிறந்தார்.

* தாய்: இலக்குமி

* தந்தை: கனகசபை

* படைப்புகள்: குடும்ப விளக்கு, இருண்டவீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு

* சிறப்பு பெயர்: , பாவேந்தர், புரட்சிக்கவிஞர்

* சிறப்பு: பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தில் உருவானது.

* தமிழக அரசு, பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது.

* ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கி வருகிறது

* திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளது.

சொற்பொருள்:

* தெளிவுறுத்தம் - விளக்கமாகக் காட்டும்

* சுவடி - நூல்

* எளிமை - வறுமை

* உலகியலின் அடங்கலுக்கும் - வாழ்வியல் முழுமைக்கும்

* நாணிடவும் - வெட்கப்படவும்தகத்தகாய - ஒளிமிகுந்த

* சாய்க்காமை - அழிக்காமை

* நூற்கழகங்கள் - நூலகங்கள்

* களைந்தோம் - நீக்கினோம்

* தாபிப்போம் - நிலைநிறுத்துவோம்

இலக்கணக்குறிப்பு:

* புதிது பதிது, சொல்லிச் சொல்லி - அடுக்குத்தொடர்கள்

* செந்தமிழ் - பண்புத்தொகை

* சலசல - இரட்டைக்கிளவி

பிரித்தறிதல்:

* வெளியுலகில் - வெளி + உலகில்

* செந்தமிழ் - செம்மை + தமிழ்

* ஊரறியும் - ஊர் + அறியும்

* எவ்விடம் - எ + இடம்

உரைநடை: பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

* மனக்குகையில் சிறுத்தை எழும். இப்பாடல் வரிகள் பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு.

* பெண்களின் சமூக விடுதலைக்காக போராடியவர் - பெரியார்.

* பெரியாரின் இரண்டு பெண்விடுதலைச் சிந்தனைகள் 1. அடிப்படைத் தேவைகள் 2. அகற்றப்படவேண்டியவை

* அடிப்படைத் தேவைகள்: பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி

* அகற்றப்படவேண்டியவை: குழந்தை திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு

* பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றவர் பெரியார்.

* பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை ஒழிக்கப்பட் வேண்டும் என்றவர் - பெரியார்.

* ஆண்கள் பெண்களைப் படிக்க வைக்கவேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும் என்றவர் - பாரதியார்.

* பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் - பெரியார்

* ஆணுக்குப் பெண் இளைப்பில்லை - என்று சிந்தித்தவர் - பெரியார்

* பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதசமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளங்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் - பெரியார்.

* சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவராக இருந்தவர் - பெரியார்

* சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த விளையாட்டு எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டவர் - பெரியார்.

* தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் ஒன்று உண்டு. அதுவே மணக்கொடை.

* பெண்களே சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர் பெரியார்

* அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புட்சி ஏற்படும் என்றவர் - பெரியார்

* பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று சொத்துரிமை

* பெரியார் சமூக முரண்களை எதிர்த்தவர்; மூடக்கருத்துகளை முட்டறுத்தவர்.

இலக்கணம்: சொல்

* ஒரு சொல் தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது - தனிமொழி

* பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள்தரும் பல சொற்கள்.

* பதம் - பகுபதம் (பகுக்கவியலும் பதம்);  பகாப்பதம் (பகுக்கவியலாப் பதம்)

* மொழி - தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி

* கிளவி - இரட்டைக்கிளவி (இரட்டைச்சொல்)

* எ.கா: பூ, கை, தா, வா - இவை ஓரெழுத்துச் சொற்கள்

* மண், மாந்தர், நடந்தனர் இவை இரண்டு முதலாகப் பல எழுத்துகள் தொடர்ந்த சொற்கள்.

* மொழி - தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும்.

* ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது தனிமொழி.

* இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.

* ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்துநின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி.

* தொழிலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல்

* வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

* ஓர் எச்ச வினை பெயரைக் கெண்டு முடிந்தால், அது பெரயெச்சம் எனப்படும்.

* முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.

* வினையெச்சம் இறந்தகால வினையெச்சம், நிகழ்கால வினையெச்சம், எதிர்கால வினையெச்சம் என மூன்று வகைப்படும்.

தொகைச்சொற்களை விரித்தெழுதுக

* இருவினை - நல்வினை, தீவினை, தன்வினை, பிறவினை

* இருதிணை - உயர்திணை, அஃறிணை, அகத்திணை, புறத்திணை

* முத்தமிழ் -  இயல்,  இசை, நாடகம்

* முப்பால் - அறம், பொருள், இன்பம்

* மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை

* மூவேந்தர் - சேரன், சோழன்,. பாண்டியன்

* நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

* நானிலம் -  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

* ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

* ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

* ஐம்புலன் - தொடுஉணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்

* ஐம்பொறி - மெய், வாய், மூக்கு, கண், செவி

இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக:

* Charity begins at home - தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்.

* Covet all lose all - பேராசை பெருநட்டம்

* Diamonds cut diamonds - முள்ளை முள்ளால் எடு

* East or west, home is the best - எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது.

* Enpty vessels make the greatest sound - குறை குடம் கூத்தாடும்.

செய்யுள்:

* கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் குகப்படலம்

சொற்பொருள்:

* ஆயகாலை - அந்தநேரத்தில்

* அம்பி - படகு

* நாயகன் - தலைவன்

* நாமம் - பெயர்

* துறை - தோணித்துறை

* தொன்மை - தொன்றுதொட்டு

* கல் - மலை

* திரள் - திரட்சி

* காயும் வில்லினன் - பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்

* துடி - பறை

* அல் - இருள்

* சிருங்கிபேரம் - கங்கைக்கரையோர நகரம்

* திரை - அலை

* மருங்கு - பக்கம்

* உபகாரத்தன் - பயன்கருதாது உதவுபவன்

* கூவா முன்னர் - அழைக்கும் முன்னர்

* குறுகி - நெருங்கி

* இறைஞ்சி - வணங்கி

* சேவிக்க - வணங்க

* நாவாய் - படகு

* நெடியவன் - உயர்ந்தவனாகிய இராமன்

* குறுகினன் - வந்துள்ளான்

* இறை - தலைவன்

* பண்ணவன் - நற்குணங்கள் பல உடைய இலக்குவன்

* பரிவு - இரக்கம்

* குறிஞ்சி - தலைமுடி

* மேனி - உடல்

* அருத்தியன் - அன்பு உடையவன்

* மாதவர் - முனிவர்

* முறுவல் - பன்னகை

* விளம்பல் - கூறுதல்

* சீர்த்த - சிறந்த

* பவித்திரம் - தூய்மையானது

* இனிதின் - இநிமையானது

* உண்டனெம் - உண்டோம் என்பதற்குச் சமமானது

* தழீஇய - கலந்த

* கார்குலாம் - மேகக்கூட்டம்

* பார்குலாம் - உலகம் முழுதும்

* இன்னல் - துன்பம்

* ஈர்கிலா - எடுக்க இயலாத

* தீர்கிலேன் - நீங்கமாட்டேன்

* அடிமைசெய்குவென் - பணிசெய்வேன்

* கடிது - விரைவாக

* முடுகின - செலுத்தினன்

* முரிதிரை - மடங்கிவிழும் அலை

* இடர் - துன்பம்

* அமலன் - குற்றமற்றவன்

* நுதல் - நெற்றி

* இளவல் - தம்பி

* உன்னேல் - நினைக்காதே

* முடுகினன் - செலுத்தினன்

* நயனம் - கண்கள்

* இந்து - நிலவு

* குரிசில் - தலைவன்

* இருத்தி - இருப்பாயாக

இலக்கணக்குறிப்பு:

* போர்க்குகன் -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

* கல்திரள்தோள் - உவமைத்தொகை

* நீர்முகில் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

* திரைக்கங்கை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

* இருந்தவள்ளல் - பெயரெச்சம்

* வந்துஎய்தினான் - வினையெச்சம்

* கூவா - கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

* குறுகி, சேவிக்க - வினையெச்சங்கள்

* தேவா - விளி

* கழல் - தானியாகுபெயர்

* வந்தனென் - தன்மை ஒருமை வினைமுற்று

* அழைத்தி(அழைப்பாய்) - முன்னிலை ஒருமை வினைமுற்று

* வருக - வியங்கோள் வினைமுற்று

* பணிந்து, வளைந்து, புதைத்து - வினையெச்சங்கள்

* இருத்தி - முன்னிலை ஒருமை வினைமுற்று

* தேனும் மீனும் - எண்ணும்மை

* மாதவர் - உரிச்சொற்றொடர்

* அமைந்த காதல் - பெயரெச்சம்

* சீர்த்த - ஒன்றன்பால் வினைமுற்று

* தழீஇய (தழுவிய) - சொல்லிசை அளபெடை

* கார்குலாம்(காரது குலாம்) - ஆறாம் வேற்றுமைத்தொகை

* உணர்த்துவான் - வினையாலணையும் பெயர்

* பார்த்தகண்ணை - பெயரெச்சம்

* தீர்கிலேன் - செய்குவென் - தன்மை ஒருமை வினைமுற்றுகள்.

* நனிகடிது - உரிச்சொற்றொடர்

* நெடுநாவாய், நெடுநீர் - பண்புத்தொகைகள்

* என்னுயிர் - ஆறாம் வேற்றுமைத்தொகை

* நின்கேள் - நான்காம் வேற்றுமைத்தொகை

* தாமரை நயனம் - உவமைத்தொகை

* தீராக் காதலன் - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

* மலர்ந்த கண்ணன் - பெயரெச்சம்

* இனிய நண்ப - குறிப்புப் பெயரெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

* பிறந்த ஊர்- தேரழுந்தூர் (நாகை மாவட்டம்)

* தந்தை - ஆதித்தன்

* காலம் - இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவன்

* ஆதரித்தவர் - திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்

* செய்ந்நன்றி மறவா இயல்பினார்.

* தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

* கம்பரது காலம் - கி.பி.12 ஆம் நூற்றாண்டு

* இயற்றிய நூல்கள் - கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி, அந்தாதி, திருக்கை வழக்கம்

* சமகாலத்துப் புலவர்கள் - செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி

* யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார் புகழ்ந்து பாடியுள்ளார்.

* வடமொழியில் கம்பராமாயணத்தை வால்மீகி முனிவர் எழுதினார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.

* கம்பராமாயணத்தில் 6 காண்டங்கள் உள்ளன.

* 1. பாலகாண்டம்

* 2. அயோத்தியா காண்டம்

* 3. ஆரண்ய காண்டம்

* 4. கிட்கிந்தா காண்டம்

* 5. சுந்தர காண்டம்

* 6. யுத்த காண்டம்

* தமிழுக்குக் கதி என்ற சிறப்பும் கம்பராமாயணத்திற்கு உண்டு.

* குகப்படலத்தை கங்கைப்படலம் எனவும் கூறுவர்.

* இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது.

* கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும்.

* அயோத்தியா காண்டத்தில் 13 படலங்கள் உள்ளன.

* பாடப்பகுதியான குகப்  படலம் ஏழாம் படலமாகும்.

* இப்பகுதியைக் கங்கைப் படலம் எனவும் கூறுவர்.

* கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரி்ய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது.

* பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்தது.

* கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது.

* சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com