வழிதவறிய பயணங்கள்:  கவிஞர் "இளவல்" ஹரிஹரன்

Updated on
1 min read
ஆயிரமும் ஐநூறும் செல்லா தென்ற       அறிவிப்பால் ஒருநாளில் கடந்து சென்றஓயாத பயணந்தான் தவறிப் போக        ஓலமிடும் கறுப்பாடு கூட்ட மாகமேயாத வழியெங்கும் மேய்ந்து செல்ல         மேய்ப்பனையே தொலைத்தபடி திரிந்து போககாயாத கானகமாய் உலகம் மாறிக்          காகிதமாய் வெறுந்தாளாய்க் கண்ணில் தோன்றும்.வழிதவறும் பயணமெலாம் இலக்கை எய்தா          வறட்டுவழிப் பயணமென ஆகிப் போகும்.மொழிதவறும் பயணமெலாம் இலக்கி யத்தில்         முறைதவறி வெறும்போக்காய் மாறிப் போகும்.விழிதவறும் பயணமெலாம் தடுமாற் றத்தில்         விதியென்றே விரைவாகக் கலைந்து போகும்.பழிசொல்லப் பயணிக்கும் பயணம் வாழ்வின்         பாதையது தவறியதாய்க் கொள்வர் நல்லோர்.சொன்னசொல்லைத் தவறுகின்ற மாந்தர் யாரும்       சுகமாகப் பயணிக்கும் நிலையில் இல்லைதன்னையறி கின்றமனம் கொண்டோர் என்றும்        தடம்மாறாப் பயணத்தில் தாமாய்ச் செல்வர்.ஒன்றுமறி யாதவுளம் கொண்டு வாழும்       உத்தமர்தம் பயணந்தான் சிறந்த தாகும்.என்னநிலை வந்தாலும் எப்போ தும்நம்       எல்லையினை மறவாத பயணம் காக்கும்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com