செல்லாக் காசு: பொன். குமார்

Updated on
1 min read

செல்லும் காசு முன்
செல்லாக் காசாகினர்
மனிதர்கள்.

செல்லாது என்ற
அறிவிப்புக்குப் பின்
செல்லுபடியாகவில்லை
மனிதர்கள் செயல்.

பதுக்கல் கார ர்கள்
பாதுகாப்பாக உள்ளனர்.
அல்லல் படுகிறார்கள்
அப்பாவி மக்கள்.

கையில் காசிருந்தும்
சாப்பாட்டுக்கு வழியில்லை.
பையில் பணமிருந்தும்
பசியைப் போக்க முடியவில்லை.

திமிங்கலங்களைப் 
பிடிக்கும் முயற்சியில்
சிறு மீன்களே
சிக்கித் தவிக்கின்றன.

செல்லாக் காசு அரசால்
செல்லுபடியாகவில்லை
செயல்படுத்தும் திட்டங்கள்.

மத்திய அரசின்
முன்னேற்ற முயற்சியில்
மக்கள் நிலை இன்று
'செல்லாக் காசு '

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com