செல்லாக்காசு: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
பாயினிலே   அமர்ந்துதொலைக்   காட்சி  கண்டோர்            பதறிடவே   வந்ததிந்தச்   செல்லாச்   செய்திமாயிருள்தான்   சூழவரும்   இரவுப்   போதில்            மக்களெல்லாம்   ஒருநொடிக்கள்   பிச்சை   யானார்வாயிருந்தும்   பசியிருந்தும்   உணவி   ருந்தும்            வந்தநோயால்    சுவைக்கதடை    யான   போலஆயிரமாய்   ஐந்நூறாய்   பணமி  ருந்தும்            அதைகொடுத்துப்   பொருள்வாங்க   முடிய   வில்லை !அன்றாடக்  காய்ச்சியர்தாம்   ஓரி   ரண்டாய்            அவர்கையில்   இருந்ததாளை  மாற்று   தற்குத்தன்கூலி   பணிவிடுத்து   வங்கி  முன்னால்            தலைகொதிக்க   நின்றார்கள்   வரிசை   தன்னில் !தன்வீட்டுள்    கணக்குதனைக்  காட்டி   டாமல்            தரைக்குள்ளே   கோடியாகப்   பதுக்கி   வைத்தோர்ஒன்றுமிங்கே   நடவாத    தன்மை  யாக            ஒருவருமே   வரவில்லை   மாற்று   தற்கே !பண்டமாற்று    முறையென்று   புத்த   கத்தில்            படித்ததினை   நேரினிலே    கண்டா   ரின்றுபண்டங்கள்   வாங்கியப்பின்    சில்ல   றைக்காய்            பணத்தாளாய்    வெற்றுத்தாள்   ஆன   தின்று !பெண்கள்தாம்   கணவனுக்குத்   தெரிந்தி   டாமல்            பெட்டிக்குள்   சேர்த்துவைத்த   சிறுவா   டெல்லாம்கண்முன்னே    வந்திடவே1   பணக்கா   ரர்கள்            கண்மறைத்த   பணம்மீண்டும்   மறைந்த   தெங்கோ !செல்லாத   காசாக   ஆக்கி   விட்டால்            செல்லவைக்க   கறுப்புவரும்   எனநி   னைத்தார்எல்லோர்க்கும்   பெப்பெப்பே    என்றாற்   போல            எடுத்ததனைப்    பொன்நிலமாய்   மாற்றி   வைத்தார் !செல்லாது   காசென்று   செய்த   போல            செய்யவேண்டும்   தங்கத்தை    நிலபே   ரத்தைபொல்லாத    கறுப்புகள்ளப்    பணமெல்   லாமே            பொதுமக்கள்  பணமாகி   உயரும்   நாடே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com