புதையல்: சசி எழில்மணி

Updated on
1 min read

மண்ணுள்ளே புதைந்தது 
பலநாள் கிடந்தது 
முன்னோர் வாழ்க்கையின் 
தரத்தைக் கூறும்

புதையுண்ட பொருட்கள் யாவும் 
வரலாற்றைப் பறைசாற்றும் 
செல்லாத காசுக்கும் 
மதிப்புகள் மேலோங்கும் 

ரகசியம் அறிந்தவர் 
தூக்கம் தொலைப்பர்
புதையலை சொந்தமாக்க 
துடியாய்த் துடிப்பர்

பசுமை நினைவுகளும் 
மனதில் படிந்திருக்கும்
புதைந்திருக்கும் உண்மைகள் 
ஒரு நாள் வெளிவரும் 

நினைவுகளை திரும்பிப் பார்க்க 
காலமும் பொன்னாய் தோன்றும்

வெளிவரும் காலம் 
வரவில்லை யெனினும் 
மனதோடு இருந்தது 
மண்ணுள்ளே புதைந்திடும் 
மனம் சொல்லா புதையலாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com