/

நெல்லுக்கிறைத்த நீர்: சசி எழில்மணி

Updated On :5 செப்டம்பர் 2016, 12:24 pm

அன்புகொண்டு நாம்வாழ அகிலம் போற்றும்
பொதுநலன் காப்பின் நம்நலம் பெருகும்
தொண்டுகள் செய்திட தோழமை வளர்ந்திடும்
நல்லார் உறவு நலம்பல வழங்கிடும்
இடுகை கொடுக்கவே காலம் தோன்றும்
இடுக்கண் களைய ஊரும் வாழ்த்தும்
வாடிய உள்ளமும் இன்சொல் கூறும்
மகிழ்ச்சிகள் ஒன்றுகூடி இன்முகம் காட்டும்
சின்னஞ்சிறு உதவியும் மலைபோல் தென்படும்
பயன்கருதா உதவி இன்பம் கொடுத்திடும்
நெல்லுக்கிறைத்த நீரில் பசியாறும் புற்கள்போல்
செய்கின்ற உதவிகள் பலரின் பசியாற்றும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.