நெல்லுக் கிறைத்தநீர்: அ.வேளாங்கண்ணி

Updated on
1 min read

நெல்லுக்கிறைத்த நீர்
வீணாகப் போகாது
வாய்க்காலில் பாயும்போது
மண்ணைப் பதப்படுத்தும்

சிறுசிறு உயிர்களின்
தாகத்தை தீர்த்துவைக்கும்
நெல்லை விளைவித்து
விவசாயியை மகிழ்விக்கும்
வழியைக் காட்டிவிட்டால்
வேறுவழி செல்லாது

துளியும் சேதமின்றி
நன்மைமட்டும் செய்துவிடும்
அடிக்கும் வெயிலையும்
அமைதிப் படுத்திவிடும்
துடிக்கும் பயிர்களின்
மூச்சுக்காற்றாய் மாறிவிடும்

இந்நீரின் சலசலப்பு
சங்கீதம் போலாகும்
மண்வெட்டி மறுக்கும்வரை
தன்வழியே போயிருக்கும்
சேற்றுக்குள் ளிறங்கி
சேதாரம் ஆகாமல்
நாற்றை விளைவித்து
சோறாகி பசியாற்றும்
நீர்பாய்ந்த நிலமெல்லாம்
இன்றெங்கே போனதுவோ
செழிப்பான வயற்காடு
செறிவிழந்து ஆனதுவே
விவசாயம் மறக்கப்பட்டு
வேறுதொழில் பிறக்குதுவே
விவசாயி வாழாவிட்டால்
உலகம் வீழ்ந்துவிடும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com