/

நெல்லுக் கிறைத்தநீர்: சாலை கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்

Updated On :5 செப்டம்பர் 2016, 12:24 pm

நெல்லுக் கிறைத்தநீர் நீள்வயல்
 பாய்வதுபோல் 
சொல்லும் மழையாலே சீராய்ப்
 பொழிந்ததுவும் 
நல்லார் ஒருவருக்காய் நன்மைசெயும் வானாக 
வல்லார் வழங்கதந்த வாழ்த்து 
நெல்லுப் பயிருக்குத் தேவையன்றோ நீர்பொசிவு 
சொல்லுப் பயிர்விதைக்கச்
 சொன்மழையைப் பாத்திகட்டிக் 
காலம் துணைக்கொண்டு 
காத்திருந்துத் தூற்றிகொள 
ஞாலம் பயனுறவே நாடு 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.