/

"நெல்லுக்கிறைத்த நீர்" - ஆர்.தியாகு

Updated On :5 செப்டம்பர் 2016, 12:27 pm

நாடு வளருமென்று...
வருமான வரி கட்டுகிறோம்
வளமாவதெல்லாம்
அமைச்சரும் பினாமிகளும்..
குடிசைகளை ஒழிக்க
திட்டம் அறிவித்தது அரசு
அடுக்குமாடிகளை
சொந்தமாக கட்டினார்கள் அதிகாரிகள்!
விவசாயத்திற்காக‌
தண்ணீரை ஏரியில் தேக்கினோம்..
உறிந்து குடிக்கிறது
மினரல் வாட்டர் கம்பெனிகள்!
நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லுக்கும் இல்லை
இப்போது
காடு செடிகள்தான் குடிக்கின்றன..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.