தண்ணீருக்கு இரத்தம்: வேலூர். மூ.மோகன்.

Updated on
1 min read
வந்தாரை வாழவைக்கும் தமிழகமேவாடி நிற்குது காவிரியின் நிலையாலே!தந்திர நரிகளால் 'மேல் திக்கில்'தாக்குதல் வன்முறை தமிழன்மேலே!நெஞ்சு பதைக்குது தினம் தினம்நெருப்பில் கருகிடும் 'மனிதாபிமானம்'!வஞ்சக 'சகுனி'களால் நம்மினத்தார்வாழ்வே கேள்வியாய்..நதிநீரால்!உயிர்நீரை எதிர்நோக்கிக் காத்திருக்கும்உழவனுக்கும் கண்களில் செந்நீர்!தாய்நாடு காக்க இரத்தம் சிந்தலாம்;தண்ணீருக்கு இரத்தம் சிந்தலாமோ?நதிகளின் நீர்வளம் அனைத்துமே நம்நாட்டுக்கே உரிய செல்வமன்றோ?பிரிவினை கோரும் பித்தர்கள்போல்உரிமை கோருதல் முறையாகுமோ?திருடனுக்கு அறிவுரை சொன்னால் அவன்திருந்திட நிறைய வாய்ப்பு உண்டு!முரடனை திருத்திட முனைந்தால் அதுமுற்றிலும் வீணாய்ப் போகுமன்றோ?நிச்சயம் இதற்கோர் தீர்வு உண்டு-நீதி தேவதையின் பார்வை பட்டு!சத்தியமே இறுதியில் வெல்லுமென்றுசரித்திரம் சொல்லும் பாடமது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com