இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

காந்திக்கு ஒரு கடிதம்: − ப.வீரக்குமார்

Updated On :4 பிப்ரவரி 2019, 10:19 am
போர்பந்தரில்பிறந்தஅமைதிப் பந்தர் நீ;அந்நியன்ஆதிக்க மகற்றிடஆத்திர வழியை விட்டுநுண்ணிய வழியைநுணுக்க மாக்கியோன் நீ;தமிழைக் கற்க − மீண்டும்ஒருபிறவி கேட்டவன் நீ;தில்லை யாடியால் −விடுதலையாட்டம் கேட்கத்துணிந்தவன் நீ;சுயநலத் தேரில்சிம்மாசனந் தேடாமல்சிறு விவசாயிஅமர ஆசைப்படடவன் நீ;சுதேசி பேசிவிதேசியை தூற்றிமதுவைத் தள்ளிமாதுவைத் தனித்தநடையில்நடக்கவிடத் துணிந்தஆத்ம நிவேதனிஅகிம்சை யுன்அன்பு ஆயுதம்;இன்று,மாதுவைத் தள்ளிமதுவைத் தனித்தநடையில்நடக்க விடத் துணிந்தஆட்சியாளர்கள்;கிம்சை மட்டுமேஅரசியல் ஆயுதம்;ஓட்டுச் சுதந்திரத்தையேவிலை பேசும்−சுயநலஇந்தியர்கள், பாட்டிலும்காந்தி சிரித்த படமும்,ஐந்தாண்டு எதற்கு?ஒவ்வொ ராண்டும் கிடைக்கக் கூடாதா?அரிச்சந்திரனைப் பார்த்துஅகிம்சை யோடுமெய் மட்டும்பேசினாய் - இன்றுசந்திர ஹரியைப் படித்துகிம்சையோடு பொய் மடடும்;சுதேசியைத் தூக்கிலிட்டுவிதேசிக்குச் சிவப்புக்கமகபள விரிப்பு களோடு,கதரிடையில் உழவனைஇணைத்தாய், இன்றுநூலிடையில் இயந்திரம்இணைந்தது.உன்அகிம்சை சித்தாந்தங்களை விடஉன்சிரிப்புப் படத்திற்கே மதிப்பதிகம்!புரியா பாஷையும்,பைத்திய, கோமாளியுமானநடையே! புதுமை இந்தியாவும்,புதுமை இந்தியரும்.                             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.