மழை இரவு

மழை இரவு
Updated on
1 min read

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் 
என்று நான்கு கண்கள் சந்திக்கும் காட்சியை 
கம்பன் பாடிய போது கம்பனுக்கு மகிழ்ச்சி!  
கம்பன் பாடிய காவியத்தில் சீதை  
ராமனைப் பார்க்க ராமன் சீதையைப் பார்க்க 
நமக்குள்ளே பற்றிப்  படர்கிறது மட்டற்ற மகிழ்ச்சி!  
எங்கோ இருக்கும் காதலியை 
மனக்கண்ணில் பார்க்கும் போது 
எண்ணத்தில் நிறைவது 
ஈடில்லா மகிழ்ச்சி!  
உள்ளம் தவித்திருக்கும் ஒற்றை மனிதனுக்கு 
அன்னை தந்தை மனைவி மக்கள் 
எண்ணம் ஒன்றே இன்ப மலர்களாய் ஏற்படும் மகிழ்ச்சி !  
பேச்சில்  உயர்ந்து கவிதையில்  
சிறந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி  
பெற்றுவிடும் மாணவர்களின் குதூகலம் 
விண்ணைத் தாண்டிச் செல்லும் 
வேகத்தில் மகிழ்ச்சி !  
வளமான பொருளாதாரம் வந்துவிட்டால் 
வறிய, எளிய மக்களுக்கு வாணளவு மகிழ்ச்சி !  
பஞ்சமும் பசியுமின்றி கொஞ்சமும் குறைகளின்றி 
நெஞ்சிலே குளிர்வைத் தந்து 
கொஞ்சிடும் பருவத்தால் பொய்க்காது 
பொழிகின்ற மகிழ்வு நிலையே ‘மழை இரவு’

- நம்பிக்கை நாகராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com