

மழை......இது பெய்யாவிடில்
தழைக்காதே ஞாலம்!
உழைக்கும் வர்கம்
அயர்ந்து உறங்கும்
இரவு நேரத்தில்
"சோ" என இரைச்சலுடன்
பெய்யும் மழை
அவர்களுக்கு தாலாட்டு!
அடித்து பெய்த
இரவு மழையில்
பள்ளங்களில் நீர் நிறைய
உள்ளம் கேட்கும் அந்த
நீரில் இருக்கும் தவளை
செய்யும் சப்தம்!
உயிர் வாழ நீர் தேவை
அது பொழிவது இரவானால்
அதையும் ரசிப்பவர்
மகிழ்ச்சியில் சொல்வது
"மழை இரவு"
- உஷாமுத்துராமன், திருநகர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.