வாழ்கையெனும் போர்க்களம்: கவிஞர் பி.மதியழகன்

Updated on
1 min read

கலி விருத்தம்

இதயத்தை இரும்பால் கொண்ட பாவிகள் 
இனத்தை அழிக்கத் துனிந்துச் செய்தானே
உதிரத்தைக் குடிக்கும் ஓநாய்கள் போலே
உயிர்களைக்கொன்றே உலவுகின் றானே!

அமைதிப் பூங்காவை அசுரர்கள் இரக்கமின்றி
அமளிதுமளி ஆக்கியே அடக்க முயன்றானே 
புனித மண்ணில் விசத்தைப் பரவவிட்டானே
பதிய ஆலையாலே பேராபத்தைத் தந்தானே!

ஆசிரியத்துறை

மனித உயிர்களைத் துச்சமென எண்ணியே
மனித மிருகமாகவே வேட்டையாடினானே
மக்கள் துயர் கேட்காத மண்டு மாமன்னனும்
மக்கள் மனதை நொந்துபோக வைத்தானே!

ஓட்டு கேட்க ஓடிவரும்கொடும்பாவிகளும்
ஒண்ணும் தெரியாத அப்பாவிப் போலவே
ரூபாய் நோட்டக்காட்டி  வாக்கு வாங்கியே
ரூபாயிக்கு தினமும் திண்டாட வைப்பானே!

குறள் வெண்செந்துறை

பார்த்துக்கொள்டா தமிழா நீயும்நல்லா
பார்த்துக் குத்து வாக்கை  நீயும் வாழவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com