ஒருமுறையேனும்: ப.க.நடராசன்

Updated on
1 min read

அறியாமையினால் இழந்தேன் கிடைத்த
அரிய வாய்ப்பினை..

அடுத்து அமைந்தால்
அரியணை அமைப்பேன்
ஆரவாரம் இல்லாமல்..

இதழ்கள் இசைக்கின்றன
இயல்பாய் வரிகள்..

தமிழ் ஈகையாய்
வாரி வழங்குகின்றன
சொற்களை கோர்வையாக..

உலகில் உரிய வழியில் உன்னதம் பெற
வாய்ப்பினை ..

ஒருமுறையேனும்
எதிர்பார்த்து...
ஊர் நலம் பெற
எழுத்துக்கள்

என் எழுத்துக்கள்
ஏணியாய் அமையும்
ஐயம் இன்றி
சொல்வேன்
வாய்ப்பே
ஒருமுறையேனும்
வந்துவிடு..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com