ஒரு முறையேனும்: சசி எழில்மணி

Updated on
1 min read

உயரம் சென்ற மனிதா நீ
வந்த வழி மறக்கலாமோ
கடந்து வந்த பாதை மறந்து
மதம் பிடித்து நடக்கலாமோ

இல்லாத நேரத்தில்
நீ பட்ட துன்பங்கள்
எல்லாம் வந்ததும்
பழையதை மறந்தாயோ

மறந்தால் வாழ்க்கை
இனிதாய் அமையுமோ
நினைத்தால் வாழ்க்கை
பாழாகிப் போகுமோ

வாழ்க்கையைத் திரும்பிப்பார்
இருக்கின்ற நேரத்தில்
நீ தந்து மகிழ்ந்திடு
உலகம் உன்னை கவனிக்கும்
ஒரு முறையேனும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com