யார் இட்ட சாபம்: கவிஞர். அரங்க கோவிந்தராஜன்   

Updated on
1 min read

ஆங்கிலம் ஒன்றே போதுமென்றும்
அதனாலே உலகாள முடியுமென்றும்
பாங்கான தமிழைப் புறக்கணிப்பார்!
இளைஞர்கள் தமிழ்தாயின்
தவப்புதல்வர்கள்
யார் இட்ட சாபம் இது ?   

தமிழ் வழிகற்ற அப்துல்கலாமும்
ஐ எஸ் ஆர் ஓ அண்ணாதிரை
மயிலுச்சாமியும் இன்னும் 
ஆயிரம் ஆயிரம்பேர் உயர்ந்துள்ளார்
திறமையினாலே!
தமிழ் பேசாவிட்டால்

நமது அடையாளத்தை இழந்திடுவோம்” 
பெற்றோர்க்கு எடுத்துரைத்தார் கலாம்!
அறியாத மூடர்தான் தமிழ் வேண்டாமென்பார்!
இப்படி தமிழ் மக்கள் பேசுதற்கு
யார் இட்ட சாபம்!

நதிநீர் அனைவர்க்கும் பொதுவாகும்
கடைக்கோடிவாழ் மக்களுக்கே உரிமையாகும்!
அறியாத பிரதமர்! இந்நாட்டிலுள்ளார் !
யார் இட்ட சாபம் இது?
நெல் களஞ்சியமாய் திகந்திட்ட தஞ்சை மண்ணை
நேர் மாறாய் எண்ணெய் தோண்டும்
பாலையாய் ஆக்கிவிட்டார்!
யார் இட்ட சாபம்!

என்ன திட்டம்? இதனாலே யாருக்கு பாதிப்பு வரும்,
என்று பார்க்கா வண்ணம் கையொப்பமிட்டார் ஒருவர்
திட்டத்தை துவக்கிவைத்தார் இன்னோருவர்
யார் இட்ட சாபமிது ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com