சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

யார் இட்ட சாபம்: சர்வோ சீனிவாசன் 

Updated On :21 மே 2018, 10:01 am

தரணி எங்கும் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய்
தமிழ் நாட்டுக்கு மட்டும் ஏனிந்த பஞ்சமோ ?
முப்போக சாகுபடி கண்ட தமிழ்நாட்டிற்க்கு 
யாரிட்ட சாபமோ ? 
ஏழு பத்து ஆண்டாய் தவிக்கிறோம் 
ஏன்னு கேக்க நாதியில்லை 
யாரிட்ட சாபமோ?

திராவிடன் என கூவி கூவி 
அறுபத்து ஏழில் அரியணை பிடித்தது 
யார் இட்ட சாபமோ ?

அள்ளி குடிக்க இலவசமாய் கிடைச்ச தண்ணி  
குப்பியிலே அடைச்சு காசுக்கு விக்கிறாங்க 
யார் இட்ட சாபமோ ?

பருவத்து மழையும் பொய்த்து போகுது 
தமிழ் நாட்டுக்கு மட்டும் 
யார் இட்ட சாபமோ ?

அதிசயமாய் கொட்டி தீர்க்கும் 
ஆனால் அதை அப்படியே 
வங்க கடலில் கலக்கவிடுவோம் 
இதுவும் யார் இட்ட சாபமோ ?

வரி பணத்தை வாரி இறைப்பாங்க 
அணைகள் எதுவும் கட்டமாட்டாங்க 
யாரிட்ட சாபமோ ?

காவிரியில் தண்ணி கேட்டு கையேந்துவாங்க 
மானமில்லா வீர தமிழனுங்க 
இதுவும் யாரிட்டசாபமோ ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.