கனவில் கார்டூனை கண்டவனுக்கு
கன்னி காதல் கனவாய்
தோன்றிய கன்னி அவளே...
என் பெயரையே
எழுத்துபிழையோடு கிறுக்கியவன்,
அவள் பெயரை மட்டும்
சந்திபிழை கூட இன்றி செதுக்கினேன்...
கார்டூனை தவிர எதையுமே ரசிக்காதவன்
எதை எதையோ ரசிக்க ஆரம்பித்தேன்...
மீசை அரும்பியதால் ஆசை வந்ததா??
ஆசை வந்ததால் மீசை அரும்பியதா??
அறிய அவகாசம் அவள் தரவில்லை
அவளை அறியவே அலைந்தவனுக்கு...
ஆணாய் என்னை உணர்ந்த தருணம்
என்றும் என் இதயத்தில்!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.