பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 5

புண்ணியங்களைச் செய்து
பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 5
Updated on
1 min read


பாடல் - 5

புண்ணியம் செய்து, நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம், இப்பிறப்பு அறுக்கும், அப்பால்
திண்ணம் நாம் அறியச்சொன்னோம், செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்.

புண்ணியங்களைச் செய்து, நல்ல நீரோடு மலர்களைத் தூவி, செறிந்த சோலைகள் நிறைந்த திருவனந்தபுரத்திலே அருள்புரியும் எம்பெருமானின் திருப்பெயரை எண்ணுங்கள், இந்தப் பிறவி அறுந்துபோகும், அதன்பிறகு, அந்த அண்ணலின் தாமரைத் திருப்பாதங்களை வணங்குங்கள், அப்படி வணங்கியவர்கள் அமரர்களாவார்கள், இதை நாம் உறுதியாகச் சொன்னோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com