

பாடல் 1
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்,
கார்மேகவண்ணன், கமல நயனத்தன்,
நீர், வானம், மண், எரி, காலாய் நின்ற நேமியான்,
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே.
கார்மேகவண்ணன், தாமரைபோன்ற திருக்கண்களையுடையவன், நீர், வானம், மண், நெருப்பு, காற்று என ஐம்பூதமாகவும் நின்றவன், சக்ராயுதத்தை ஏந்தியவன், தன்னுடைய பெயரை வானவர்கள் சொல்லும் பெருமையுடையவன், எம்பெருமான், அத்தகைய தாமோதரனின் திருவடிகள் பக்திநெறிக்கு ஏற்றவை, அவனை வணங்கி அத்திருவடிகளை நாம் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.