
பாடல் 8
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி உடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள,
கொடி அணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே.
கிரீடமணிந்த வானவர்களெல்லாம் அடியவர்களைக் கண்டு, ‘இவர்கள் கோவிந்தனுடைய குடி அடியார்கள்’ என்று வாழ்த்தினார்கள், முறைப்படி எதிர்கொண்டு வரவேற்றார்கள், பின்னர், அடியவர்கள் அழகிய திருவடிவத்தையுடைய மாதவனின் வைகுந்தத்திலே புகுவதற்காகக் கொடிகளை அணிந்த, நீண்ட மதிள் சுவரைக்கொண்ட கோபுரத்தை அடைந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.