நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செ.குளோரியான்

பாடல்  2

மாயம் செய்யேல் என்னை, உன் திருமார்வத்து மாலை நங்கை
வாசம்செய் பூங்குழலாள் திரு ஆணை, நின் ஆணை கண்டாய்,
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய், என்னைக் கூவிக்கொள்ளாய் வந்து, அந்தோ.

எம்பெருமானே, என்னிடம் மாயம் செய்யாதே, உன்னுடைய திருமார்பில் மாலைபோல் விளங்குகிற நங்கை, வாசனை நிறைந்த பூங்குழலைக்கொண்ட திருமகள்மீது ஆணை, உன்மீது ஆணை, என்னை நேசித்து, என்னுடைய உயிரை வேறோர் உயிராகக் கருதாமல், வெறுக்காமல் உன்னோடு என்னை ஒன்றாக ஏற்றுக்கொண்டாய், இங்கே வந்து என்னை உன்னோடு கூவி அழைத்துக்கொள், அடடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.