தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சொற்றுணை வேதியன் - பாடல் 6

சலம் - வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை.

Updated On :22 செப்டம்பர் 2015, 6:44 am

     சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்

     நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்

     குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்

     நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">சலம் - வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. வேண்டுதல் வேண்டாமை அற்றவன். அனைவருக்கு ஒரே தன்மையாக உள்ளவன்.</p><p align="JUSTIFY">சங்கரன் - இன்பம் அளிப்பவன்.</p><p align="JUSTIFY">சிவபிரானின் நாமத்தைச் சொல்பவர் எத்தன்மையராக இருந்தாலும், கொடுந்தொழில் புரிபவராக இருப்பினும், ஏழு நரகங்கள் செல்ல வேண்டிய பாவங்கள் புரிந்தவராயினும், அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் சம்பந்தப் பெருமானின் பதிகங்கள், இங்கே நினைவுகூறத் தக்கவை.</p><p align="JUSTIFY">இந்தப் பாடல்கள், சம்பந்தர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல்கள் (காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் பதிகம்) ஆகும்.</p><p align="JUSTIFY">கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்</p><p align="JUSTIFY">இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்</p><p align="JUSTIFY">எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்</p><p align="JUSTIFY">நல்லார் நாமம் நமச்சிவாயவே</p><p align="JUSTIFY">நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்</p><p align="JUSTIFY">உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர்</p><p align="JUSTIFY">விரவியே புகுவித்திடும் என்பரால்</p><p align="JUSTIFY">வரதன் நாமம் நமச்சிவாயவே</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">அனைவருக்கு ஒரே தன்மையாகக் காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான், தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.