ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 9

கரிய மலையினைப் போன்றும்

Updated On :9 டிசம்பர் 2016, 6:30 pm

கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன் அவனும்
                                                                             காணான்
திருவரை அனைய பூமேல் திசைமுகன் அவனும் காணான்
ஒருவரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே

விளக்கம்

கருவரை = கரிய மலை. திருவரை = திருமகள் தங்கும் இடமாக கருதப்படும். அருமை = அரிய தன்மை. ஒரு வரை = ஒப்பற்ற மலையாகிய கயிலை மலை.

பொழிப்புரை

கரிய மலையினைப் போன்றும் கடலினைப் போன்றும் மேனி நிறத்தினை உடையவனாகிய திருமால் காணமுடியாதபடி நின்றவன் சிவபெருமான்.

திருமகள் உறையும் இடம் என்று கருதப்படும் தாமரை மலரில் அமர்பவனாகிய பிரமனும் காணமுடியாதபடி நின்றவன் சிவபெருமான். ஒப்பற்ற மலையென்று கருதப்படும் கயிலை மலையின் உச்சியில் மேம்பட்ட நிலையில் விளங்குபவன் சிவபெருமான். இத்தனை அரியவனாக இருக்கும் சிவபெருமான், அடியார்களுக்கு மிகவும் எளியவனாகத் திகழும் தலம் வலம்புரம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.