ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

30. வண்ணமும் வடிவும் - பாடல் 6

கங்கை மற்றும் உமையம்மை ஆகிய இருவரை மனைவிகளாகக் கொண்டவன் என்பதால், அப்பர் நாயகிக்கு ஒரு விதமான மகிழ்ச்சி.

Updated On :11 ஜூலை 2016, 10:17 am

பாடல் 6

கங்கையைச் சடை வைத்து மலைமகள்
நங்கையை உடனே வைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக் கழிப்பாலையான்
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே
 

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கங்கை மற்றும் உமையம்மை ஆகிய இருவரை மனைவிகளாகக் கொண்டவன் என்பதால், அப்பர் நாயகிக்கு ஒரு விதமான மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு காரணம், தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன் ஒரே மனைவி என்ற கொள்கை உடையவன் அல்லன். எனவே தன்னையும் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு பிறக்கின்றது. தான் சிவபிரான் பால் வைத்துள்ள அன்பின் தன்மையை அவன் உணர்வான் என்பதால், தனது அன்பின் மிகுதி அவளுக்கு இறுமாப்பினை ஏற்படுத்துகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்டவாறு, இது வரை அவனது வண்ணத்தையும் வடிவினையும் நேரில் கண்டவள் அல்லள் நமது நாயகி. எனவே தனக்கு அடையாளத்தினை உணர்த்துவதற்காக திங்களைச் சடையில் சூடியவாறு சிவபெருமான் வருவான் என்று கற்பனை செய்கின்றாள்.</p><p align="JUSTIFY">இந்த பாடல் நமக்கு சுந்தரர் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (7.23.2) நினைவூட்டுகின்றது. அடியார்கள் சிவபெருமானை நினைத்தால், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று அருள் புரியும் தன்மை உடையவன் சிவபெருமான் என்று சுந்தரர் கூறுகின்றார்.</p><p align="JUSTIFY">எங்கேனும் இருந்து உன்னடியேன் உனை நினைந்தால்<br />அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி<br />இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்<br />கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">கங்கையைத் தனது சடையில் வைத்து, உமை அம்மையையும் தனது உடலில் வைத்து, தனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் பரமனார், தான் அவன் பால் வைத்திருக்கும் ஆழமான அன்பின் தன்மையை உணர்த்து நிச்சயம் தன்னைச் தேடி வருவான் என்று இறுமாந்திருக்கும் எனது மகள், தான் யார் என்பதை உணர்த்துவதற்காக, பிறைசூடியாக சிவபெருமான் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் உள்ளாள்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.