ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

28. வனபவள வாய் திறந்து - பாடல் 5

பழி ஏதும் இல்லாதவன் என்றும், மிகுந்த புகழ் உடையவன் என்றும்,

Updated On :18 ஜூன் 2016, 5:20 am

பாடல் 5

பழியிலான் புகழுடையான் பால் நீற்றன் ஆனேற்றன் என்கின்றாளால்
விழி உலாம் பெரும் தடங்கண் இரண்டல்ல மூன்றளவே என்கின்றாளால்
சுழியுலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால்
கழியுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கழி = உப்பங்கழி. தடம் = அகன்ற. பால் நீற்றன் = பால் போன்று வெண்மையான திருநீற்றினை அணிந்தவன். ஏற்பது இகழ்ச்சி என்பது ஆன்றோர் வாக்கு. தாருகவனத்து கோலத்தை முந்தைய பாடல் குறிப்பிட்ட அப்பர் நாயகி, தாருகவனம் என்றவுடன் அனைவருக்கும் சிவபெருமான் பிச்சைப் பெருமானாக சென்ற கோலம் நினைவுக்கு வரும் என்பதால், அவ்வாறு பிச்சை ஏற்றதால் பழி ஒன்றினையும் பெறாத பெருமான் என்பதை முதலில் தெளிவு படுத்திவிட்டு, மேலே தான் பெருமானைக் கண்ட கோலத்தினை இங்கே கூறுகின்றாள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">பழி ஏதும் இல்லாதவன் என்றும், மிகுந்த புகழ் உடையவன் என்றும், பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்தவன் என்றும், எருதினை வாகனமாகக் கொண்டவன் என்றும், மற்றவர்கள் போல் இரண்டு விழிகள் அல்லாமல், நீண்டு அகன்ற மூன்று விழிகளைக் கொண்டவன் என்றும், நீர்ச் சுழிகளுடன் பரந்து மிகவும் வேகமாக இறங்கி வந்த கங்கை நீற்றினை சடையில் தரித்தவனே என்றும் எப்போதும் சிவபெருமானின் அடையாளங்களையே சொல்லிக்கொண்டு இருக்கின்றாள். உப்பங்கழிகள் சூழ்ந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, அவள் கண்டாள் போலும்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.