ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

28. வனபவள வாய் திறந்து - பாடல் 6

பண்கள் நிறைந்த ஒலியினை எழுப்பும் வீணையைப் பயிலும் விரல்களை உடையவனே என்றும், நல்ல வாழ்க்கை

Updated On :21 ஜூன் 2016, 10:40 am

பாடல் 6

பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின்றாளால்
பண்ணார் முழவதிரப் பாடலொடு ஆடலனே என்கின்றாளால்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">எண்ணார் = நினையாதவர்கள். முதலில் சிவதன்மத்தில் ஈடுபட்டு சிவபெருமானை வணங்கி வழிபட்டு நன்னெறியில் வாழ்ந்து வந்த திருபுரத்து அரக்கர்கள், பின்னர் சிவனை மறந்து, சிவதன்மத்தை மறந்து, அந்நாள் வரை செய்து வந்த நியமங்களை நிறுத்தினார்கள். மேலும் தாங்கள் கடைப்பிடித்த நன்னெறிகளிலிருந்து வழுவி மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்தனர். அதன் பின்னர் தான் சிவபெருமான் அவர்களுடன் போருக்குச் சென்றார். அதனால் தான் எண்ணாத அரக்கர்கள் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்..</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">பண்கள் நிறைந்த ஒலியினை எழுப்பும் வீணையைப் பயிலும் விரல்களை உடையவனே என்றும், நல்ல வாழ்க்கை முறைகளை மறந்து அனைவருக்கும் தொல்லை கொடுத்த திரிபுரத்து அரக்கர்கள் மூவரது பறக்கும் கோட்டையினை எரித்தவனே என்றும், பண்களுக்கு ஏற்ப முழவு எனப்படும் தோற்கருவி வாத்தியம் இயங்க, பாடிக்கொண்டே கூத்தை நிகழ்த்தும் திறமை உடையவனே என்றும் எனது மகள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கின்றாள். கண்களுக்கு நிறைவைத் தரும் பூஞ்சோலைகள் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.