ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 4

பறை எனப்படும் இசைக்கருவியின் ஓசையும்,

Updated On :11 நவம்பர் 2016, 11:54 am

    பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
    மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
    நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர்
    உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே



விளக்கம்

பறை = ஒரு வகையான தோற்கருவி. அயலெல்லாம் = ஊர்ப் புறங்களில், திருக்கோயிலிலும் கோயிலைச் சூழ்ந்த வீதிகளிலும் எழுகின்ற ஓசை, ஊர்ப் புறங்களில் கேட்கின்றது என்று கூறுவதன் மூலம், மிகவும் அதிகமான மக்கள் பறைக்கருவியை முழக்குவதிலும், இசைப் பாடல்கள் பாடுவதிலும், வேதங்கள் ஓதுவதிலும் ஈடுபட்டனர் என்பதை அப்பர் பெருமான் நமக்கு உணர்த்துகின்றார்.

பொழிப்புரை

மிகவும் அதிகமான மக்கள் பங்கெடுத்துக் கொண்டு எழுப்பும் பறை எனப்படும் இசைக்கருவியின் ஓசையும், இறைவைனைக் குறித்து பாடப்படும் பாடல்களின் ஓசையும், மறைகளின் ஓசையும் கலந்து ஒலிக்கின்ற பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூர் ஈசனை எனது உள்ளம் எண்ணுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.