ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

57. பாறலைத்த படுவெண் - பாடல் 3

கொடுமையானதும் வலிமை வாய்ந்ததும்

Updated On :6 ஏப்ரல் 2017, 12:20 pm

பரவி நாளும் பணிந்தவர் தம் வினை
துரவையாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே

 

விளக்கம்

துரவை = இல்லாததாக. குரவம் = குரவம் எனப்படும் மலர். பரவி = போற்றிப் புகழ்ந்து.

பொழிப்புரை

நாள்தோறும் தன்னைப் போற்றிப் புகழ்ந்து வணங்கும் அடியார்கள்மேல் படர்ந்துள்ள கொடுமையானதும் வலிமை வாய்ந்ததும் ஆகிய வினைகளை, ஒன்றும் இல்லாமல் போக்கும் கருணை உள்ளத்தவரும், குரவ மலரின் நறுமணம் வீசும் கூந்தலை உடைய உமை அம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக கொண்டவரும், பாம்பினை தனது இடுப்பினில் கட்டி தனது விருப்பம் போன்று ஆடச் செய்பவரும் ஆகிய பெருமான் அன்னியூர் தலத்து இறைவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.