ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை ஆர் குழலாளை ஒர் பாகமா
ஆனை ஈருரியார் அன்னியூரரே
விளக்கம்
முதல் அடியின் கடைசியில் வரும் உழல் என்ற சொல்லினை அடுத்த அடியின் முதற் சொல்லுடன் சேர்த்து உழல்வானை என்று பொருள் கொள்ள வேண்டும்.
பொழிப்புரை
தசைப்பற்று கொண்டதும் வெண்மை நிறத்தில் உள்ளதும் ஆகிய பிரமனின் தலையில் பலி கொள்வதற்காக ஊரெல்லாம் திரியும் பெருமானை வானவர்கள் வணங்குகின்றார்கள். தேன் போன்று இனிய குரலினை உடைய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுள்ள பெருமான், குருதி சொட்டும் யானையின் தோலை போர்வையாகத் தனது உடலின் மீது போர்த்தவர் ஆவார். அவர்தான் அன்னியூர் தலத்தில் உறைகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

