மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 8

காதல் மயக்கத்தில்

News image
Updated On :6 அக்டோபர் 2017, 5:04 am

பாடல் 8:
    பிறையும் சூடி நல் பெண்ணோடு ஆணாகிய
    நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
    அறையும் பூம்புனல் ஆவடு தண்டுறை
    இறைவன் என்னை உடையவன் என்னுமே

விளக்கம்:
நிறை=ஒழுக்கம்; கற்பு; நீர்மை=அழகு; முந்தைய பாடலில் இறைவன் மீது கொண்டுள்ள காதல் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மகள் என்று கூறிய தாய், அந்த மயக்கம் தந்த செருக்கு தன்னுடைய பெண்ணிடத்தில் ஏற்படுத்திய மாறுதலை இங்கே குறிப்பிடுகின்றாள். இறைவனை என்னை உடையவன் என்று உரிமையோடு அவள் அழிப்பதை நாம் உணரலாம்.  

பொழிப்புரை:
தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரனை, காக்கும் பொருட்டுத் தனது தலையில் சூடியவனாகவும், அம்மையப்பனாகவும் உள்ள இறைவன், எனது கற்பினையும், அழகினையும் எனது உள்ளத்தினையும் கொள்ளை கொண்டவனாக உள்ளான். வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த சோலைகளை உடைய ஆவடுதுறை தலத்தில் உள்ள இறைவன், தன்னை உடையவன் என்றும் இந்த பெண் கூறுகின்றாள். இறைவனே நீ இவளை ஏற்றுக்கொண்டு, இவள் ஏமாற்றம் அடையாமல் காக்க வேண்டும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.