பாடல் 8:
பிறையும் சூடி நல் பெண்ணோடு ஆணாகிய
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
அறையும் பூம்புனல் ஆவடு தண்டுறை
இறைவன் என்னை உடையவன் என்னுமே
விளக்கம்:
நிறை=ஒழுக்கம்; கற்பு; நீர்மை=அழகு; முந்தைய பாடலில் இறைவன் மீது கொண்டுள்ள காதல் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மகள் என்று கூறிய தாய், அந்த மயக்கம் தந்த செருக்கு தன்னுடைய பெண்ணிடத்தில் ஏற்படுத்திய மாறுதலை இங்கே குறிப்பிடுகின்றாள். இறைவனை என்னை உடையவன் என்று உரிமையோடு அவள் அழிப்பதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரனை, காக்கும் பொருட்டுத் தனது தலையில் சூடியவனாகவும், அம்மையப்பனாகவும் உள்ள இறைவன், எனது கற்பினையும், அழகினையும் எனது உள்ளத்தினையும் கொள்ளை கொண்டவனாக உள்ளான். வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த சோலைகளை உடைய ஆவடுதுறை தலத்தில் உள்ள இறைவன், தன்னை உடையவன் என்றும் இந்த பெண் கூறுகின்றாள். இறைவனே நீ இவளை ஏற்றுக்கொண்டு, இவள் ஏமாற்றம் அடையாமல் காக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


