பாடல் 9:
வையம் தான் அளந்தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற்றார்க்கு அழல் ஆயினான்
ஐயன் ஆவடு தண்டுறையா எனக்
கையில் வெள்வளையும் கழல்கின்றதே
விளக்கம்:
மெய்=உண்மையான பரம்பொருள்; தாமே உயர்ந்த பரம்பொருள் என்று பிரமனும் திருமாலும் ஒருவருக்கு ஒருவர் வாதம் செய்தவராக இருந்த போது, நீங்கள் இருவரும் பரம்பொருள் அல்ல, நான் தான் பரம்பொருள் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட தழலாக பெருமான் வெளிப்பட்டதை உணர்த்தும் வண்ணம், மெய்ப்பொருளை காண முயற்சி செய்தவர் என்று திருமாலையும் பிரமனையும் அப்பர் இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
மூன்று உலகங்களையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமாலும், பிரமனும் உண்மையான மெய்ப்பொருளினைத் தேடிய போது, அவர்கள் அடியினையும் முடியினையும் காணாத வண்ணம், நீண்ட அழலாக மாறிய இறைவனே, எனது தலைவனே, குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் இறைவனே என்று எப்போதும் வாய்விட்டு கூவி அழைக்கும் எனது மகளின் உடல், இறைவனுடன் இணையாத ஏக்கத்தில் இளைத்து வருந்துவதால், அவளது கைகளில் இருக்கும் வெண்சங்கு வளையல்கள் கழன்று விழுகின்றன. ஆவடுதுறை இறைவனே, நீ தான் அருள் கூர்ந்து எனது பெண்ணின் காதலை ஏற்று, அவளது உடல் தேறுமாறு செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


