மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

82. காலை எழுந்து கடிமலர் - பாடல்  2

சடையில் உள்ள வெண்தலை

News image
Updated On :12 டிசம்பர் 2017, 6:30 pm

பாடல் 2: 

வண்டணை கொன்றையும் வன்னியும்
                                          மத்தமும் வாளரவும்
கொண்டு அணைந்தேறு முடி உடையான்
                                         குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை
                                        உறைவார் சடை மேல்  
வெண்டலை மாலை அன்றோ எம் பிரானுக்கு
                                       அழகியதே


விளக்கம்:


தொண்டு=தொண்டர்கள், அடியார்கள்: குரைசேர் கழல்=சிலம்புகள் அணிந்ததால் ஒலி எழுப்பும் பாதங்கள்.

பொழிப்புரை: 

புதுமலர்களாக காணப்படுவதால் வண்டுகள் தங்கும் தன்மை படைத்த கொன்றை மாலையினையும், வன்னி, ஊமத்தை மலர்களோடு, ஒளி வீசும் பாம்பினையும் தனது சடையில் அணிந்து காணப்படுபவர் சிவபெருமான் ஆவார். சிலம்புகள் ஒலியெழுப்பும் அவரது திருவடிகளை அடியவர்கள் வணங்குகின்றார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் சோற்றுத்துறையில் உறைகின்றார். அவரது நீண்டு அழகாக காணப்படும் சடையில் உள்ள வெண்தலை மாலை சிவபெருமானுக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.