மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 4

பெருமை வாய்ந்த

News image
Updated On :15 டிசம்பர் 2017, 5:03 am

பாடல் 4:

ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால்விடை
                                                               ஏறி எங்கும்
பேர்ந்த கை மான் இடம் ஆடுவர் பின்னு சடை
                                                              இடையே
சேர்ந்த கைம் மாமலர் துன்னிய சோற்றுத்துறை
                                                             உறைவார்   
ஏந்து கைச் சூலம் மழு எம் பிரானுக்கு அழகியதே


விளக்கம்:


மால்விடை=பெருமை வாய்ந்த இடபம்: வாளரவம்=மினுக்கும் ஒளியை உடைய கொடிய அரவம்: ஆய்ந்த=ஆராய்ந்த: பேர்ந்த கை=வீசி நடமாடும் கை: கைம்மலர்=அடியார்கள் பூசையின் பொது தங்கள் கைகளால் தூவிய மலர்கள்: 

பொழிப்புரை:

கையில் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த, மினுக்கும் கோடுகளை உடையதும் கொடியதும் ஆகிய பாம்பினை ஏந்திக் கொண்டு, பெருமைக்குரிய இடபத்தின் மீது ஏறி எங்கும் செல்பவர் சிவபெருமான். அவர் கைகளை வீசிக்கொண்டு நடமாடுகையில், மற்றொரு கையில் மான் கன்றினையும் ஏந்தி காணப்படுகின்றார். அடியார்கள் வழிபாட்டின் போது தங்கள் கைகளால் தூவிய மலர்கள் சிவபெருமானது சடையில் நிறைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சோற்றுத்துறை தலத்தில் உறையும் சிவபெருமானது கைகளில் சூலம் மற்றும் மழு மிகுந்த அழகுடன் காணப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.