புரிகாலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்
எரிகாலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்
தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளியாரே
விளக்கம்
நேசம் = அன்பு. கால் = காற்று. எரிகாலே மூன்றும் = நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம், நீர், நிலம் ஆகிய பூதங்கள். புண்டரீகம் = இதயத் தாமரை. புண்டரீகத்தார் = இதயத் தாமரையில் இடம் கொண்டிருப்பவர். புரி = இடைவிடாது. மூன்று சந்தி = இரவும் காலையும் சந்திக்கும் உதயம், முன்பகலும் பின்பகலும் சந்திக்கும் நண்பகல். மற்றும் மாலையும் இரவும் சந்திக்கும் அந்தி நேரம். போலி வேடதாரிகளாக சிவபெருமானை வணங்கும் மனிதர்களை, முந்தைய பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில், உண்மையான அன்பினை இறைவன்பால் வைத்து வழிபடும் அடியார்களுக்கு எவ்வாறு இருப்பார் என்று கூறுகின்றார். .
பொழிப்புரை
இடைவிடாது இறைவன் பால் அன்பு வைத்து வழிபடும் அடியார்களின் இதயத் தாமரையில் வீற்றிருப்பவர் சிவபெருமான். ஐம்பூதங்களாக இருக்கும் சிவபெருமானை தேவர்கள் வணங்குகின்றார்கள். காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று சந்திக் காலங்களிலும், அடியார்கள் சிவபெருமானின் திருவடிகளை தியானித்து வணங்க, இறந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் கடந்தவராய் விளங்கும் சிவபெருமான் திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

