காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவினோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதியுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டுக் கணங்கள் ஏத்த
சீரொடு பாடலானார் திருச்செம்பொன் பள்ளியாரே
விளக்கம்
பதினெட்டு கணங்கள் - பதினெட்டு வகையான இன வகைகள்: தேவர், அசுரர், தானவர், கருடர், கின்னரர், கிம்புருடர், யட்சர், வித்தியாதரர், அரக்கர், சித்தர், கந்தருவர், சாரணர், பூதர், பைசாசர், தாரகையர், நாகர், ஆகாச வாசிகள் மற்றும் போக பூமியர். பார் = கீழுலகம். காருடைக் கொன்றை = கார்க்காலத்தில் காணப்படும் கொன்றை மலர்கள். அடியார்கள் தன்னை மிகவும் புகழ்ந்து பாடும் பாடல்களை விருப்பமாக ஏற்றுக்கொள்ளும் சிவபெருமான் அத்தகைய பாடல்களாக மாறிவிடுகின்றார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
பொழிப்புரை
கார் காலத்தில் காணப்படும் கொன்றை மாலை, கதிரொளி வீசும் சந்திரன், பாம்பு மற்றும் கங்கை நதி ஆகியவற்றை சடையில் அணிந்து, நீதியே வடிவினராய், அந்த நீதியை நடத்தும் இறைவனே, பூவுலகம், பாதாளம் மற்றும் விண்ணுலகும் ஆகிய மூன்று உலகங்களிலும் பதினெட்டு வேறுவேறு இனங்களைச் சார்ந்தவர்கள் உம்மை புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு துதித்துப் பாடப்படும் பாடல்களின் வடிவமாக உள்ளவர், திருச்செம்பொன்பள்ளியில் உள்ள இறைவனார் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

