திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 8

கார் காலத்தில் காணப்படும் கொன்றை மாலை

Updated On :9 மார்ச் 2017, 10:25 am

காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவினோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதியுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டுக் கணங்கள் ஏத்த
சீரொடு பாடலானார் திருச்செம்பொன் பள்ளியாரே
 

விளக்கம்

பதினெட்டு கணங்கள் - பதினெட்டு வகையான இன வகைகள்: தேவர், அசுரர், தானவர், கருடர், கின்னரர், கிம்புருடர், யட்சர், வித்தியாதரர், அரக்கர், சித்தர், கந்தருவர், சாரணர், பூதர், பைசாசர், தாரகையர், நாகர், ஆகாச வாசிகள் மற்றும் போக பூமியர். பார் = கீழுலகம். காருடைக் கொன்றை = கார்க்காலத்தில் காணப்படும் கொன்றை மலர்கள். அடியார்கள் தன்னை மிகவும் புகழ்ந்து பாடும் பாடல்களை விருப்பமாக ஏற்றுக்கொள்ளும் சிவபெருமான் அத்தகைய பாடல்களாக மாறிவிடுகின்றார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை

கார் காலத்தில் காணப்படும் கொன்றை மாலை, கதிரொளி வீசும் சந்திரன், பாம்பு மற்றும் கங்கை நதி ஆகியவற்றை சடையில் அணிந்து, நீதியே வடிவினராய், அந்த நீதியை நடத்தும் இறைவனே, பூவுலகம், பாதாளம் மற்றும் விண்ணுலகும் ஆகிய மூன்று உலகங்களிலும் பதினெட்டு வேறுவேறு இனங்களைச் சார்ந்தவர்கள் உம்மை புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு துதித்துப் பாடப்படும் பாடல்களின் வடிவமாக உள்ளவர், திருச்செம்பொன்பள்ளியில் உள்ள இறைவனார் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.