திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

49. பண்காட்டி படியாய - பாடல் 5

கங்கை நதியையும் பாம்பினையும்

Updated On :18 ஜனவரி 2017, 11:20 am

பற்றவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்றவன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால்    
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே
 

விளக்கம்

பற்றவன் = அனைத்து பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடாக இருப்பவன். கயவர் = கீழ்மைக் குணம் கொண்டவர்கள். இந்த சொல் மூலம், திரிபுரத்து அரக்கர்கள், வைதீக மதத்தையும் சிவநெறியையும் நிந்தித்த செய்கை உணர்த்தப்படுகின்றது. செற்றவன் = வெற்றிகொண்டவன். முனிவர்களும் தவசிகளும் சடை வைத்து இருப்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் எவரும் சடையான் என்று அழைக்கப்படுவதில்லை. அனைவர்க்கும் முதல் முனிவனாகத் திகழும் பெருமான்தான் சடையான் என்று அழைக்கப்படுகின்றான்.

பொழிப்புரை

உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும், உயிர்களுக்கும் பற்றுக்கோடாகத் திகழும் இறைவன், கங்கை நதியையும் பாம்பினையும் சந்திரனுடன் தனது சடையில் வைத்துக்கொண்டுள்ளான். அனைத்து முனிவர்களுக்கும் தவத்தோர்களும் முன்மாதிரியாக இருக்கும் சடையானாகிய அவன், உயர்ந்த ஞானங்களை இயல்பாகவே கற்றவன். கீழ் மக்களாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஓரே அம்பினால் வீழ்த்தி அவர்களை வென்ற பெருமான் உறைகின்ற வெண்காடு தலம் சென்று, நெஞ்சமே, நீ இறைவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.